• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விசாரணைக்குப் பிறகு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தண்டிக்கப்படுவார் – சரிதா நாயர்

December 14, 2017 தண்டோரா குழு

முழுமையான விசாரணைக்குப் பிறகு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் தண்டிக்கப்படுவார்கள் என சரிதா நாயர் கூறியுள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக கூறி 26 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதாநாயர் இன்று ஆஜர் ஆனார். எனினும், சாட்சிகள் வராததால் வழக்கு வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்கு நீதிபதி
ராஜவேல் ஒத்தி வைத்தார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர்,

கேரளா சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது என்றும், முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக கேரள முன்னாள் முதல்வர் உமன் சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சரிதாநாயர் தெரிவித்தார்.

மேலும் படிக்க