• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

வாழ்க்கை என்பது உயிருடன் இருப்பது மட்டுமல்ல, ஆரோக்கியமாக இருப்பதுதான்” – மார்கஸ் அரேலியஸ்

April 7, 2022 தண்டோரா குழு

கொரோனா தொற்று நோய் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக நமக்கு உணர்த்தியுள்ளது. பி எஸ் ஜி செவிலியர் கல்லூரி மாணவ செவிலியர் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சமூக நல செவிலியர் துறை இணைந்து ஏப்ரல் 7, 2022 அன்று உலக சுகாதார தினத்தை “நமது உலகம் நமது ஆரோக்கியம் ” என்ற கருப்பொருளுடன் அனுசரித்தது.

யோகா பயிற்சி , உடல் நலக்கல்வி, குறு நாடகம், விளையாட்டுகள் மற்றும் பள்ளி சுகாதார மேளா போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.யோகா உடலுக்கும் மனதுக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.இது அமைதியையும் நினைவாற்றலையும் வழங்குகிறது மற்றும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

பீளமேடு பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆலோசகர் ஜலாதரன் பி எஸ் ஜி விளையாட்டு மைதானத்தில் காலை 7 மணிக்கு எளிய யோகாசனங்களை செய்து காண்பித்தார். இதில் சுமார் 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பி எஸ் ஜி மருத்துவமனை‘பி’ பிரிவு வளாகத்தில் 2ம் ஆண்டு மாணவர்கள் குறு நாடகம், நலக்கல்வி மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பள்ளி ஆரோக்கிய மேளா பி எஸ் ஜி வேடப்பட்டி மேல்நிலை பள்ளியில் 4ம் ஆண்டு மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சுற்றுப்புற சுகாதாரம், நொறுக்கு தீனிகளால் ஏற்படும் தீமைகள் குறித்த பேஷன் ஷோ, உடற்பயிற்சி நடனம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர்இதன்முலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைந்தனர்.

ஆரோக்கியமான உலகத்தை நோக்கி நகரும் வகையில் நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விதைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க