• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாள் வீச்சு போட்டிகளில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

November 11, 2019

வாள் வீச்சு போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் இ ராசாமணி 30 ஆயிரம் மதிப்புள்ள வாள் வீச்சு உபகரணங்களை அவருக்கு வழங்கினார்.

வாள் வீச்சு போட்டிகளில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை தீபிகா என்பவர் தொடர் சாதனை படைத்து வருகிறார்.சமீபத்தில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று அனைவரது பாராட்டையும் அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தான் தொடர்ந்து இவ்விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தீபிகா ராணிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் 30 ஆயிரம் மதிப்புள்ள வாள் வீச்சு உபகரணங்களை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவருக்கு வழங்கினார். இவ்வுதவியானது அவரது சாதனை தாகத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க