March 28, 2021
தண்டோரா குழு
வானதி ஸ்ரீனிவாசனுடன் விவாதிக்க எங்கள் மாணவர் அமைப்பினரே போதும் என ம.நீ.ம.பொதுச்செயலாளர்சிகே.குமாரவேல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் சிகே. குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அமமச்சர் ஸ்மிருதி இராணி எங்கள் தமைவமர பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம். அவரது சவாமை ஏற்றுக்கொள்கிறோம்.
முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார்.அதையடுத்து,நிதியமமச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார்.அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு வானதி ஸ்ரீநிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும் ஏற்கனவே இருமுறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகாிக்கப்பட்டு,
இப்போது மூன்றாவது முறையாக
தோற்க தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்.
இவ்வாறு கூறியுள்ளார்.