வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வலைத்தளம் பேஸ்புக்.சமீபத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்ளை திருடி,தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனை ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூகர்பெர்கும் ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
இவ்விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இது தொடர்பான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஆஜராகினார்.அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது உண்மை தான் என்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.அவரது இந்த விளக்கத்தால் சட்ட வல்லுநர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதைப்போல் ஃபேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டது.ஆனால்,அதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனம் தனது அறிக்கையின் மூலம் இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு
சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை