• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வளைய சூரிய கிரகணத்தை காண கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் சிறப்பு ஏற்பாடு

December 25, 2019

நாளை தெரியவுள்ள வளைய சூரிய கிரகணத்தை காண கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை வளைய சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும். நாளை நிகழும் வளைவடிவ சூரிய கிரகணம் கோவை, அவிநாசி,ஈரோடு,கரூர், திருப்பூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் சிறப்பான முறையில் தெரியும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காணும் வகையில் தோன்றவுள்ள இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட கண்ணால் பார்க்க கூடாது. சூரியனின் பெரும் பகுதியை சந்திரன் உள்ளடக்கியிருந்தாலும் பார்வை குறைபாட்டுக்கும் வழிவகுக்கும்.

இதற்கிடையில் பள்ளி கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் சூரிய கிரகணத்தை காணும் வகையில் பிரக்தரு சயின்ஸ் சொசைட்டி, கோவை ஏஇஎஸ் டெக்னாலஜீஸ் ஆகியவற்றோடு இணைந்து சிறப்பு கருவிகள் மூலம் சூரிய கிரகணத்தை காண ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் அறிவியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து சூரிய கிரகணம் குறித்து விளக்கவுள்ளனர். பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு விளக்க மளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க