குடும்ப வன்முறைகளை தடுக்க ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ எனும் பிரசாரம் வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது என்று ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா கோவையில் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன. குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலம் வலிமையான ஆக்கப்பூர்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்.
அதன் அடிப்படையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் 19 முதல் 28ம் தேதி வரை ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ என்ற மைய கருத்தில் தேசிய அளவில் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு கதீஜா காஜா கூறினார்.
கோவை மாநகர மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிர்வாகிகள் பர்ஜானா, சலீனா பஹி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !