• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் விவேக்

December 30, 2016 தண்டோரா குழு

தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் வெள்ளிக் கிழமை ஆஜராகியுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாராக இருந்த ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் வீடுகள், அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

அதைப் போல், சென்னை நந்தனம் பகுதியில் விவேக் நடத்தி வரும் நிறுவனத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விவேக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு வருவதற்காக வருமானவரி புலனாய்வுத் துறையினர் விவேக்கிற்கு சம்மன் அனுப்பினர்.

ஆனால், குடும்பப் பிரச்சினை காரணமாக ஆஜராக முடியவில்லை என விவேக் வருமான வரித்துறையினரிடம் தொடர்ந்து கூறிவந்தார்.இந்நிலையில், வெள்ளியன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் விவேக் விசாரணைக்காக ஆஜரானர்.

மேலும் படிக்க