• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வயிற்றில் விழுங்கி போதை மாத்திரை கடத்தல்…! 4கோடி மதிப்பிலான குப்பிகள் பறிமுதல்..!

May 10, 2022 தண்டோரா குழு

கோவை விமானத்தில் வந்த பயணி ஒருவர் 4கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.உகாண்டாவில் இருந்து கடந்த 6ஆம் தேதி விமானம் ஒன்று கோவைக்கு வந்துள்ளது.

வழக்கம் போல் பரிசோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ளார்.இதனையடுத்து அந்த பெண்ணை சோதனை செய்த அதிகாரிகள் வயிற்றில் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது.இதனையடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அழைத்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு போதை மாத்திரைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

அப்பொழுது வயிற்றில் 81 மாத்திரை குப்பிகள் இருந்ததாவும்,இதன் மதிப்பு 4 கோடி என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து அந்த பெண்ணை கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க