• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வயல்களை காப்பாற்றகோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 3, 2018 தண்டோரா குழு

வயல்களை காப்பாற்றக்கோரி விவாசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த குரல் ஒரு புறமிருக்க, மற்றொருபுறம் விலங்குகளிடமிருந்து வயல்களை காப்பாற்றகோரி விவசாயிகள் குரல் எழுப்புகிறார்கள். கோவை மாவட்டத்தில் பல நாட்களாகவே வன விலங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள், என பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோயமுத்தூர் மாவட்டக்குழு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில் வன விலங்குகளால் பொது மக்கள், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பாதிப்பால் தொடர்ந்து உயிர் சேதமும், வீடுகள், பயிர்கள் மற்றும் பண்னைகளுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளார்கள். யானை, காட்டு பன்றிகள், யானைகள், சிறுத்தைகள், புலிகள் மான்கள், செந்நாய் போன்ற வன விலங்குகளை கண்காணித்து அடர்ந்த காடுகளுக்குள் இடமாற்றம் செய்யவும், விலங்குகள் சேதப்படுத்துபவைக்கு உரிய நஷ்ட ஈடு அளிக்கவும் மேலும் ஏற்படும் சேதத்தை தடுப்பது குறித்து சில தீர்மானங்களை கூறியுள்ளனர்.

மேலும் படிக்க