• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி அமைக்ககோரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை ஆட்சியரிடம் மனு

March 18, 2022 தண்டோரா குழு

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:

விவசாயிகள் சங்கம் ஜாதி மதம் கட்சி சார்பற்றது. எங்கள் சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் மூலமாக முன்வைத்துள்ளோம்.நாங்கள் அளிக்கும் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மத்திய மாநில அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரடி போராட்டம் நடத்த உள்ளோம்.

வன உயிர்கள் பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். வனத்திற்குள் சென்று வேட்டையாடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க இந்த சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.அதிலேயே தற்காப்புக்காக ஒரு விலங்கை கொலை செய்தால் குற்றம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் பட்டா நிலத்திற்கு வரும் விலங்குகள் உயிருக்கும் பயிருக்கும் சேதம் விளைப்பதால் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைப்போல் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் நேரடியாக பொதுமக்களுக்கு வாடகைக்கு கொடுத்து விவசாய பூமிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மாற்ற வேண்டும் என்றார்.

மேலும் படிக்க