• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வனப்பகுதிக்குள் விரட்டும் போது மின்கம்பத்தில் மோதி ஆண் யானை பலி

March 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், வனச்சரகத்திற்குட்பட்ட தடாகம் காப்புக் காட்டிற்கு வெளியே வெளியே, சுமார் 1 கி.மீ. தொலைவில்,பூச்சியூர் குறுவம்மா கோவில் பகுதி உள்ளது. இதற்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில், உள்ள மின் வாரிய மின் கம்பி விநியோக சிமெண்ட் போஸ்ட் மீது ஒரு நடுத்தர வயது ஆண் யானை இன்று அதிகாலை உரசியதை அடுத்து மின்சார சிமெண்ட் கம்பம் உடைந்து, மின் கம்பம் மற்றும் கம்பி யானை மீது விழுந்ததில்,அந்த ஆண் யானை, சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது.

உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இறந்த இடம் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் ஆகும். உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் வனக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாலையில் யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது வனத்துறையினர் யானையை மீண்டும் வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் எதிர்பாரதவிதமாக யானை மின் கம்பத்தில் மோதி உயிர் இழந்தது,” என்றனர்.

மேலும் படிக்க