• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனப்பகுதிக்குள் விரட்டும் போது மின்கம்பத்தில் மோதி ஆண் யானை பலி

March 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், வனச்சரகத்திற்குட்பட்ட தடாகம் காப்புக் காட்டிற்கு வெளியே வெளியே, சுமார் 1 கி.மீ. தொலைவில்,பூச்சியூர் குறுவம்மா கோவில் பகுதி உள்ளது. இதற்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில், உள்ள மின் வாரிய மின் கம்பி விநியோக சிமெண்ட் போஸ்ட் மீது ஒரு நடுத்தர வயது ஆண் யானை இன்று அதிகாலை உரசியதை அடுத்து மின்சார சிமெண்ட் கம்பம் உடைந்து, மின் கம்பம் மற்றும் கம்பி யானை மீது விழுந்ததில்,அந்த ஆண் யானை, சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது.

உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இறந்த இடம் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பயன்பாட்டில் இல்லாத தரிசு நிலம் ஆகும். உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் வனக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாலையில் யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது வனத்துறையினர் யானையை மீண்டும் வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் எதிர்பாரதவிதமாக யானை மின் கம்பத்தில் மோதி உயிர் இழந்தது,” என்றனர்.

மேலும் படிக்க