• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு என்பது இயற்கை முறையில் உள்ளது – வனத்துறை அமைச்சர் தகவல்

May 3, 2023 தண்டோரா குழு

கோவை வடகோவையில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தினை வனத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பார்வையிட்டார். உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

நான்கு நாட்களுக்கு கோவை பகுதியில் வனத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.மதுக்கரையில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் துரித கதியில் செயல்பட்டு தீயை அனைத்துள்ளோம்.

கோவை சாடிவயலில் யானைகள் முகாம் அமைப்பதற்கான நடவடிக்கைக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.சாடிவயல் பகுதியில் முகாம் அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்யவுள்ளது.யானைகள் உயிரிழப்பு குறித்த குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வனப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு என்பது இயற்கை முறையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சேவா சிங், வன பாதுகாவலர் மற்றும் கலை இயக்குனர் (ஆனைமலை புலிகள் காப்பகம்) ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க