• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வண்ணமயமாக காட்சியளிக்கும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை

January 30, 2021 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபடுத்தப்பட்டு கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை
வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

நாட்டில் உள்ள நகரங்களை பொலிவுறச்செய்யும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையை பொலிவுபடுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டும் ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டு,நகரில் உள்ள சாலைகள் அழகு படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில், கடந்தாண்டு கோவை மணிக்கூண்டு சாலை பகுதிகள் வர்ணம் பூசப்பட்டு சோதனை அடிப்படையில் பொலிவு படுத்தப்பட்டன.அதேபோல தற்போது கிராஸ்கட் சாலை சிக்னல் துவங்கி, வடகோவை மேம்பாலம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டதுடன், சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமரும் இடங்கள், நடைபாதையில் இரு ஓரங்களிலும்,பூச்செடிகள் என கிராஸ் கட் சாலை தற்போது ஜொலித்து வருகிறது.

மேலும் படிக்க