• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

April 4, 2020 தண்டோரா குழு

மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வட இந்தியர்களால் நோய் பரவுவதற்கு முன் அவர்களை, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அருகில் குடியிருக்கும் மக்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரொனா எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகரத்திற்குள் சுற்றித்திரிந்த வட மாநிலத்தவர்கள் 52க்கும் மேற்பட்டோர், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் பின்புறமுள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு,வடக்கு வட்டாட்சியர் தலைமையில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தனிமனித இடைவெளி விட்டு மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநிலத்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஆட்சியரை சந்திக்க வந்திருந்தனர். காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அவர்களிடம் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக வடக்கு வாட்டாட்சியர் தெரிவித்ததை அடுத்து களைந்து சென்றனர்.

மேலும் மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 52 பேரில் இரண்டு பெண்கள் உள்ளதாகவும், 4 பேரை ரூமில் வைத்து பூட்டி இருப்பதாகவும் , ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் நிலையில் ,மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் இரவு முழுவதும் இருமுவதாகவும்,தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ஆட்சியரிடம் புகாரளிக்க வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க