• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடக்கு மண்டல பகுதிகளில் மேயர் ஆய்வு

December 31, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரன்பாளையம், கக்கன்வீதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியினை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்பின்னர் பள்ளியில் உள்ள கழிப்பறைகள் மற்றும் மணியகாரம்பாளையம் அம்மா உணவகம் அருகில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க