கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரன்பாளையம், கக்கன்வீதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியினை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்பின்னர் பள்ளியில் உள்ள கழிப்பறைகள் மற்றும் மணியகாரம்பாளையம் அம்மா உணவகம் அருகில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது