• Download mobile app
27 Jul 2025, SundayEdition - 3455
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடக்கு மண்டல பகுதிகளில் மேயர் ஆய்வு

December 31, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரன்பாளையம், கக்கன்வீதியில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியினை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்பின்னர் பள்ளியில் உள்ள கழிப்பறைகள் மற்றும் மணியகாரம்பாளையம் அம்மா உணவகம் அருகில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க