• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் புதிய வசதி

March 8, 2017 தண்டோரா குழு

வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

“வீட்டிலிருந்து வேலை” என்னும் புதிய கொள்கைக்கு அவ்வங்கியின் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கியின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே தங்களுடைய கைபேசியை பயன்படுத்தி, வங்கியின் அவசர பணிகளை முடிக்கலாம்.

“கைபேசி கம்ப்யூடிங் தொழில்நுட்பங்களை வங்கி பயன்படுத்தும். அனைத்து செயல்படுத்தப்பட்ட சாதனங்களை வங்கி தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். கைபேசி சாதனங்களின் தரவு மற்றும் அதன் பயன்பாடுகள் காக்கப்படும்.

வங்கியில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, சமூக ஊடக மேலாண்மை, தீர்வு மற்றும் நல்லிணக்கம், புகார்கள், மேலாண்மை பயன்பாடுகள் ஆகிய இவைகளை வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்து பார்த்துக்கொள்வர்கள். இவ்வாறு செய்வதால் பணியாளர் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும்” என்று எஸ்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க