• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக ஏற்றுக்கொண்டது கர்நாடக அமைச்சரவை

March 19, 2018 தண்டோரா குழு

லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சில ஆண்டுகளாக வீரவைச-லிங்காயத்து வகுப்பை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை சில மடாதிபதிகள் முன் வைத்தனர். கடந்த 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், ஆன்மிகத்துடன் சமூக முற்போக்கை ஏற்படுத்தியவருமான பசவண்ணரின் தத்துவங்களை  இவ்வகுப்பினர் மேற்கொண்டு வருவதால், முழுக்க முழுக்க சிவபெருமானை வழிபடுகிறார்கள். கர்நாடாகவில்  லிங்காயத் சமூகத்தினர் 11.5 % முதல் 19% மக்கள் தொகை உள்ளனர். மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110ல் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்து இன மக்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க