• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக ஏற்றுக்கொண்டது கர்நாடக அமைச்சரவை

March 19, 2018 தண்டோரா குழு

லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சில ஆண்டுகளாக வீரவைச-லிங்காயத்து வகுப்பை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை சில மடாதிபதிகள் முன் வைத்தனர். கடந்த 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், ஆன்மிகத்துடன் சமூக முற்போக்கை ஏற்படுத்தியவருமான பசவண்ணரின் தத்துவங்களை  இவ்வகுப்பினர் மேற்கொண்டு வருவதால், முழுக்க முழுக்க சிவபெருமானை வழிபடுகிறார்கள். கர்நாடாகவில்  லிங்காயத் சமூகத்தினர் 11.5 % முதல் 19% மக்கள் தொகை உள்ளனர். மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110ல் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்து இன மக்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தினராக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கையின்படி தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. லிங்காயத்துகள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க