• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லாரி மோதி மாணவன் சாவு

November 11, 2021 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.‌ கூலி தொழிலாளி. இவரது மகன் சர்வேஸ்வரன் (8). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.

மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் வேனில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். வீட்டின் அருகே வேனில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றான். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியது.‌ இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் சர்வேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க