• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உணவு வழங்கல்

September 4, 2025 தண்டோரா குழு

லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 1D லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் சார்பில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆர் எஸ் புரம் மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் அமைந்துள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியவர் இல்லத்தில் நடைபெற்றது.

கோவைப்புதூர் எம்.எஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அரிமா சண்முகம், மனோன்மணி சண்முகம் மற்றும் சந்தோஷ் மல்லையா ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வானது நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.கே ஆறுமுகம் கலந்துகொண்டு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா எம்.ரமேஷ், அரிமா ஜெகதீசன்,அரிமா டாக்டர் சாரதா, அரிமா சந்திரசேகர், அரிமா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியினை லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் தலைவர் அரிமா டி ஜி எஸ் பொன்னம்பலம் ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க