• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லண்டனில் மீண்டும் கைதான விஜய் மல்லையா சிறுது நேரத்தில் ஜாமீனில் விடுதலை

October 3, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச்செலுத்தவில்லைஎன அவர் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, இங்கிலாந்திற்கு தப்பிய விஜய் மல்லையாவை கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. அதைபோல் விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவியையும் இந்திய அரசு கோரியிருந்தது.

இதற்கடையில் கடந்த ஏப்ரலில் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில்,இந்தியாவில் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக தொழிலதிபர் விஜய் ,மல்லையா லண்டனில் இன்று மீண்டும் கைது செய்யபட்டார். இதையடுத்து பிணையில் விடுவிக்கக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க