• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லஞ்ச புகாரில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு ஜாமீன்

March 8, 2018 தண்டோரா குழு

லஞ்சப் புகாரில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி மற்றும் உதவி செய்ததாக தர்மராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கணபதி இருமுறை கோவை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முறையிட்டார். ஆனால், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்,  தினமும் 2 முறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்,  கோவை மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது; வெளியே செல்வதாக இருந்தால் முன் அனுமதி பெறவேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க