• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோட்டரி கிளப் ஆஃப் மெரிடியன் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம் !

June 26, 2021 தண்டோரா குழு

நோயாளிகளுக்கு கடுமையான இரத்த
பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக, ரோட்டரி கிளப் ஆஃப்மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோயம்புத்தூர்
கிளையும் இணைந்து கோயம்புத்தூர்
ஐ.எம்.ஏ ஹாலில் சிறப்பு
இரத்ததான முகாம் ஒன்றினை நடத்தியது.

ரோட்டரி மெரிடியன் மற்றும் இந்திய மருத்துவ சங்க பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் மற்றும் சுகாதார துணை இயக்குநர் டாக்டர் எஸ்.செ ந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் இன்று 150 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் கோவை மருத்துவ கல்லூரி இரத்த வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிக்கில் கூறுகையில்,

இந்த தொற்று நோய்களின்
சூழ்நிலையில் ரத்தத்தின் தேவைக்கு
ஒப்பிடும் போது இரத்த தானம் குறை வாகிவிட்டது.இதனால் ரோட்டரி மெரிடியனைச் சேர்ந்த நாங்கள் ஐ.எம்.ஏ இரத்த வங்கியுடன்
இணைந்து சிறப்பு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த நேரத்தில் பல உடல்நல சிக்கல்களால் பலருக்கு இரத்த பற்றாக்குறை ஏற்படுவதைக் காணலாம். எனவே நாங்கள் நோயாளிகளுக்கு தேவைப்படும் இரத்தத்தை கொடுக்க
ஒரு சிறிய நடவடிக்கை எடுத்துள்ளளோம் என்றார்.

மேலும் படிக்க