• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த ஆணையாளர்

July 27, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 23க்குட்பட்ட விமான நிலைய சேவை சாலை மற்றும் பாரீஸ் நகர் பகுதியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் சுமார் 240 மீட்டர் தொலைவிற்கு ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த அவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது உடன் மாமன்ற உறுப்பினர் கே.மணியன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

மேலும் படிக்க