• Download mobile app
02 Aug 2025, SaturdayEdition - 3461
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த ஆணையாளர்

July 27, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 23க்குட்பட்ட விமான நிலைய சேவை சாலை மற்றும் பாரீஸ் நகர் பகுதியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் சுமார் 240 மீட்டர் தொலைவிற்கு ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த அவர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது உடன் மாமன்ற உறுப்பினர் கே.மணியன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

மேலும் படிக்க