• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ. 7000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

March 16, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் தாக்கலான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகள்:
“உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரணத் தொகை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 5௦0 மையங்கள் அமைக்கப்படும்.

சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும். பயிர்க் காப்பீட்டு மானியத் திட்டத்திற்கு ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளைப் பாதுகாக்க அரசு நிதியுதவி வழங்கும். கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”

இவ்வாறு நிதியமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.

மேலும் படிக்க