• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நல்வாழ்வு மையம் கட்டடப்பணிகள் – மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 29, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் டாக்டர் நஞ்சப்பா சாலையிலுள்ள நகர்நல மையம் மற்றும் கணபதியிலுள்ள நகர்நல மையம் ஆகியவற்றிற்கு மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சைக்கான வருகை பதிவேடு உள்ளிட்டவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து வார்டு எண் 26க்குட்பட்ட பீளமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நல்வாழ்வு மையம் கட்டடப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட கமிஷனர் பணிகளை தரமானதாகவும், விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க