• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள் ; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

March 30, 2017 A.T ஜாகர்

கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் கடந்த சில மாதங்களாக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியவும் பல முறை அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் “10 ரூபாய் நாணயம் சட்டபூர்வமாக செல்லும். வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என்றது. ஆனாலும் கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வர வில்லை.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் நடத்துனர்கள் அதனை வாங்க மறுத்து பாதி வழியிலேயே அவர்களை இறங்க்கிவிடப்பட்ட சம்பவங்களும் கோவையில் சில இடங்களில் அரங்கேறி வருகின்றன. பொதுமக்களும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மயிலானந்தனம் கூறுகையில் “ கூலி வேலைக்கு செல்லும் ஏழை,எளிய மக்கள் இந்த பிரச்சனையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். சிறு கடைகளில் ஆரம்பித்து பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனை மக்களிடம் தெளிவுப்படுத்த தமிழக அரசாங்கம் முன் வர வேண்டும்.” என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மார்ச் 9-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்” ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, 10 ரூபாய் நாணயம் சட்டபூர்வமாக செல்லக்கூடியதாகும். ஆகவே, பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி 10ரூபாய் நாணயங்கள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் செய்துகொள்ளலாம். அவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.

மாவட்ட நீர்வாகமும், அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்தும் கூட இன்னமும் பல இடங்களில் குறிப்பாக சில அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க