• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூபெல்லா தடுப்பூசி முகாம் 14 நாள் நீடிப்பு

March 1, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் புதன்கிழமை முதல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தட்டம்மை போன்ற நோய்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கத்தில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 9 மாதம் முடிந்த குழந்தை முதல் 15 வயது வரையிலான இளைஞர் வரையில் இத்தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

இதனிடையில் தமிழகத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,

“ரூபெல்லா தடுப்பூசியைப் போடுவதால் குழந்தைகளுக்குப் பக்க விளைவோ, பாதிப்போ ஏற்படாது. இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. ரூபெல்லா தடுப்பூசி பற்றி சமூக வலைதளங்களில் உலா வரும் தவறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். ரூ.1,000 மதிப்புள்ள இந்த தடுப்பூசி பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக போடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு ருபெல்லா ஊசி போடுவதற்கு பெற்றோர் அனுமதி கடிதம் தேவையில்லை” என்றார்.

தட்டம்மை போன்ற நோய்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கான முகாம் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்த முகாம் புதன்கிழமை முதல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க