• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை

June 19, 2025 தண்டோரா குழு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணியில் உள்ள சி ஆர் ஐ சோலார் நிறுவனம், பல மாநிலத்திடமிருந்து ரூபாய் 210 கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

சிஆர்ஐ பம்புகள் குழுமத்தின் ஒரு அங்குமான சிஆர்ஐ சோலார் நிறுவனம், மகாராஷ்டிரா மாநில எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (MEDA), ஹரியானா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (HAREDA), பஞ்சாப் எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (PEDA) ஆகியவற்றிடமிருந்து இந்த ஆர்டர்களைப் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மேற்கண்ட மாநிலங்களில் மொத்தமாக 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் நிலையான நீர்ப்பாசன உள்கட்டமைப்பை உருவாக்க இந்த உயர்மதிப்புள்ள ஆர்டர்கள் உதவிகரமாக இருக்கும். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தி, விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டங்களுக்கு சிஆர்ஐ நிறுவனம் தொடர்ந்து ஆதரவும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது.

விரிவான அனுபவமும், நிபுணத்துவமும் பெற்றுள்ள சி.ஆர்.ஐ. சோலார், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் துவங்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு திட்டங்களை, குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெரிய அளவிலான சூரிய சக்தி நீர் இறைக்கும் திட்டங்களை துல்லியமாகவும், தர உத்தரவாதத்துடனும் செயல்படுத்தும் திறன் சி.ஆர்.ஐ சோலார் கொண்டுள்ளது. .

இதுகுறித்து சிஆர்ஐ குழுமத்தின் தலைவர் திரு. ஜி. சௌந்தரராஜன் கூறுகையில் :- நாட்டின் கிராமப்புற மற்றும் விவசாய நிலப்பரப்புகளில் சுத்தமான, நம்பகமான மற்றும் நிலையான நீர்ப் பாசன வசதியை ஏற்படுத்துவதில் சிஆர்ஐ நிறுவனம் முக்கியப் பங்காற்றி வருகிறது. மேற்கண்ட திட்டங்கள் கிராமப்புற உள்கட்டமைப்பை மட்டுமல்ல, கிராமப்புற வளர்ச்சி, எரிசக்தி துறை மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும். சுத்தமான அதே சமயம் நிலையான எரிசக்தியை உருவாக்கும் பணியை சிஆர்ஐ செய்து வருகிறது என்றார்.

இந்தியா முழுவதும், IOT செயலாக்கப்பட்ட ஸ்மார்ட் வசதிகளுடன் கூடிய 1.81 லட்சம் சோலார் பம்பிங் சிஸ்டம்களை சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவியுள்ளது. இதன் மூலமாக மின்சார சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை துறையில் நிலைத்தன்மையை உருவாக்கும் முன்னணி நிறுவனமாக சிஆர்ஐ சோலார் நிறுவனம் திகழ்கிறது. இந்த முயற்சியின் மூலமாக 6100 மில்லியன் யூனிட்டுகள் kWh மின்சாரம் சேமிப்பதற்கு பங்களித்துள்ளது. மேலும், 4.80 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு CO2 மாசுவை குறைக்க உதவியுள்ளது.

சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசுத் திட்டங்களில், சிஆர்ஐ சோலார் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந் நிறுவனம் உயர் திறன் கொண்ட சோலார் பம்பிங் சிஸ்டம்களை உருவாக்குதல், விற்பனைக்குப் பிந்தைய முழுமையான சேவை, நீர்பாசன வசதியில் அறிவார்ந்த தொலைதூர கண்காணிப்பு வசதிகள் ஆகிய சேவைகள் உள்ளடங்கும்.

மேலும் படிக்க