வரும் ஜூன் மாதம் பிரேசிலில் நடக்கவுள்ள ரியோடிஜெனிரோ ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் தனது ஒலிம்பிக்ஸ் சகாப்தம் முடிவடையா உள்ளதாக உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பெறுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த உசேன் போல்ட் பதிலளித்த போது, வரும் ரியோ ஒலிம்பிக்ஸ் எனது கடைசி ஒலிம்பிக்ஸ் போட்டியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வரை இன்னும் 4 ஆண்டுகளுக்கு என்னைத் தொடர்ந்து உத்வேகத்தில் வைத்திருப்பது மிகவும் சிரமமாகும். வரும் ரியோடிஜெனிரோ ஒலிம்பிக்ஸ் போட்டியுடன் நான் ஒளிபிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது முடிந்து விடும் என்று தெரித்தார். மேலும், அடுத்தாண்டு லண்டனில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியுடன், தடகள போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற உசேன் போல்ட் திட்டமிட்டுள்ளார்.
இந்தாண்டு நடக்கவுள்ள ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் குறைந்தது 3 தங்கப்பதக்கங்கள் வெல்லத் தீர்மானித்துள்ள உசேன் போல்ட், அதற்கான கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2008 மற்றும் 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தனது அசர வைக்கும் வேகத்தால் 6 தங்கப்பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
200 மீட்டர் ஓட்ட பந்தயத்தை 19 வினாடிகளுக்குள் கடந்து விடுவது உசேன் போல்ட்டின் இலட்சியமாகும். பெர்லினில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 19.19 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் உலக சாதனை புரிந்துள்ளார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது