• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணுவ வீரர்களின் குறைகளைத் தெரிவிக்க “வாட்ஸ் அப்” எண் அறிமுகம்

January 28, 2017 தண்டோரா குழு

ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிப்பதற்கு வசதியாக பிரத்யேக “வாட்ஸ் அப்” எண்ணை ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிமுகப்படுத்தியுள்ளார்.

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவிய நிலையில் வேறு சில பி.எஸ்.எப். வீரர்களும், தங்கள் குறைகளைச் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை வெளியிடக் கூடாது என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக +91 9643300008 என்ற பிரத்யேக “வாட்ஸ் அப்” எண்ணை ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிமுகப்படுத்தினார்.

மேலும் படிக்க