• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விடுதலை கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

June 15, 2018 தண்டோரா குழு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் வேண்டுகோளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து சிறையில் இருக்கும் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் உடல் ஆரோக்கிய நிலை,மனநிலை,குடும்பச்சூழல் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

மேலும் படிக்க