• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விடுதலை கோரும் மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

June 15, 2018 தண்டோரா குழு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் வேண்டுகோளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து சிறையில் இருக்கும் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் உடல் ஆரோக்கிய நிலை,மனநிலை,குடும்பச்சூழல் உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

மேலும் படிக்க