• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஷ்யாவிலுள்ள 755 அமெரிக்க தூதர அதிகாரிகள் வெளியேற ரஷ்ய அதிபர் உத்தரவு

July 31, 2017 தண்டோரா குழு

ரஷ்யாவிலுள்ள 755 அமெரிக்க தூதர அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷ்யக் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2016ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில், ரஷ்யா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் தான், ரஷ்யாவில் பணியாற்றி வரும் 755 அமெரிக்க தூதரகர்கள் ரஷ்யாவை வீட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு ரஷ்யாவிலுள்ள“Russia Summer House and Storage facility” என்னும் இரண்டு தூதரங்கள் நாளை(ஆகஸ்ட் 1) முதல் மூடப்படவுள்ளது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த பாரக் ஒபாமா 35 ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றினார்.வாஷிங்டன் நகரிலுள்ள இரண்டு தூதரங்களை பயன்படுத்தி, ரஷ்யா உளவு பார்க்கிறதாக குற்றம்சாட்டி, அந்த இரண்டு தூதரங்களை மூட உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க