• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயி்ல் மறியல் போராட்டம் – மு.க. ஸ்டாலின், கனிமொழி கைது

January 20, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயி்ல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம், தனியார் பள்ளிகள் விடுமுறை, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், தொழிற்சங்கள் வேலைநிறுத்த போராட்டம் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்படி சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க-வினர் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டத்திற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார். தமிழகத்தின் பல இடங்களில் ஏராளமான தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க