• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் கழிவறை நீரை டீ, காபியில் கலந்த விவகாரம்: 1 லட்சம் அபராதம்

May 3, 2018 தண்டோரா குழு

ரயில் கழிவறை நீரைப்பிடித்து, தேநீர், காபி சப்ளை செய்யும் கேனில் கலந்தது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அந்த வீடியோவில் ரயிலில் டீ விற்கும் ஊழியர் ஒருவர் கழிவறையில் இருந்து தண்ணீரை கொண்டு டீ கேனை நிரப்பிக் கொண்டிருக்கும் காட்சி இருந்தது.இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் ரயில்வே நிர்வாகிகளிடம் புகார்கள் கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது.விசாரணையில் இச்சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் சென்னை – ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸில் நடந்தது என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சமந்தப்பட்ட டீ விற்பனையாளரின் விவரம் சேகரிக்கப்பட்டது.அதில் இந்த ஊழியர்களை ஒப்பந்தம் செய்து வைத்திருந்த உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரர் காசிப்பேட் பி.சிவபிரசாத் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க