• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜூன் 15) பள்ளிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

June 14, 2018 தண்டோரா குழு

ரம்ஜானையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், பிறை தெரிந்தவுடன் ரமலான் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.முன்னதாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஜூன் 16ம் தேதி ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.எனினும் இன்று பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றவுள்ளது.பிறை தென்பட்டால் நாளை (ஜூன் 15) ரமலான் கொண்டாப்படும். இல்லாவிட்டால் ஜூன் 16ம் தேதி ரமலான் கொண்டாடப்படும்.

ஆனால்,தமிழகம் உட்பட சில தென்னிந்திய மாநிலங்களில் நாளை (ஜூன் 15ம் தேதி) ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவராத நிலையில்,வார இறுதியில் ரமலான் பண்டிகை வருவதால்,மொத்தமாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்குச் செல்லவும்,சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளவும் பலர் எண்ணியிருந்தனர்.

எனினும் விடுமுறை குறித்து உறுதியான தகவல்கள் வெளிவராததால்,சிலர் தங்களது விடுமுறை திட்டங்களை ரத்து செய்தனர்.இந்நிலையில்,ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க