• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரமலான் மாத சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் – சுன்னத் ஜமாத் கூட்டமைப்பினர் மனு

April 26, 2021 தண்டோரா குழு

ரமலான் மாத சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து சுன்னத் ஜமாத் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் பொதுச்செயலாளர் இதாயத்துல்லாஹ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிவாசலுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியுடன் நின்று தொழுகை நடத்துவது, பள்ளிவாசல்களுக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வது என முழுமையான கட்டுப்பாடு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் வழிபாடுகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாடு என கூறி இன்று முதல் வழிபாட்டிற்கான அனுமதியை முழுமையாக மறுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு சிறப்புமிக்க மாதமாகும். எனவே முஸ்லிம்களின் உணர்வை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்ற இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு தலங்களுக்கு சென்று தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க