• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ரத்தம் வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள்” ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன?

May 26, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்,விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

அந்த ஆடியோவில், என்ன வேண்டும் என்று ஒருவர் கேட்க மூச்சுத் திணறலோடு ஜெயலலிதா இருமும் ஒலி கேட்கிறது. ரத்த அழுத்தம் 140/80 என அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரிவிக்க, இது எனக்கு நார்மல் தான் என ஜெயலலிதா தெரிவிக்கிறார். ரத்தம் எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார் ஜெயலலிதா. அதைபோல் தியேட்டரில் ரசிகன் விசில் அடிப்பது போல் மூச்சுத் திணறலின்போது சத்தம் வருகிறது என்கிறார். ஜெயலலிதா அடிக்கடி இருமிக் கொண்டே பேசுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க