• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார்– சீமான்

March 12, 2018 தண்டோரா குழு

ரஜினி போராடவும் மாட்டார் அறிக்கை விடவும் மாட்டார் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பளார் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 

குரங்கனி மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாமல் உள்ளே சென்றார்கள் என்றால் வனத்துறையில் சோதனை செய்ய ஆட்களே இல்லையா? அரசின் பதில் பொறுப்பற்றது.இயற்கையாக தீ பற்றினால் அணப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையா?பேரிடர் ஏற்படும் போதெல்லாம் இதே போல் தான் நடவடிக்கைகள் உள்ளது.குரங்கனி தீ விபத்தை முன்னிறுத்தி காட்டு பகுதிக்குள் யாரையும் செல்ல விடாமல் தடுத்து நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.

மேலும், பலவிஷயங்களில் ரஜினி கருத்து கூற மறுப்பது குறித்து கேட்ட கேள்விக்கு,அவர் அப்படிதான் நழுவி போவார்,  போராடவும் வர மாட்டார் அறிக்கை விடவும் மாட்டார் நேரடியாக முதல்வர் பதவிக்கு தான் ஆசைப்படுகிறார் என்று சீமான் கூறினார்.

மேலும் படிக்க