June 9, 2018
தண்டோரா குழு
யாஹூ மெசேஞ்சர் சேவை அடுத்த மாதம் 17-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் குறுந்தகவல்களை அனுப்ப வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர் என பல்வேறு அதிநவீன செயலிகள் வந்துவிட்டன. ஆனால், உலகிலேயே முதல்முறையாக குறுந்தகவல் அனுப்ப 1998-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி யாஹூ பேஜர் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய நிலையில் யாஹூ பேஜர் சேவை பிரபலம். ஆனால், தற்போது அதிநவீன குறுந்தகவல் அனுப்பும் வசதிகளின் ஆதிக்கம் அதிகரித்ததால், யாஹூ மெசேஞ்சரின் மவுசு குறைந்து போனது.
இதனால், யாஹூ மெசேஞ்சர் சேவையை ஜூலை 17-ஆம் தேதி முதல் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ மெசேஞ்சர் பயன்பாட்டாளர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை அடுத்த மாதங்களுக்கு டவுன்லோடு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ மெசேஞ்சருக்கு மாற்றாக, யாஹூ ஸ்குரெல் ((Yahoo Squirrel)) என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.