• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யாஸ் புயல் காரணமாக கோவை வழித்தடத்தில் இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து

May 25, 2021 தண்டோரா குழு

யாஸ் புயல் காரணமாக கோவை வழித்தடத்தில் இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

யாஸ் புயல் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு கோவை,ஈரோடு, சேலம் வழித்தடங்களில் இயக்கப்படும் ஷாலிமர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் 26-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் நாளை ,பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 28-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

திருவனந்தபுரம் -அசாம் மாநிலம் சில்சார் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நாளையும், சில்சார்- திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.இதுதவிர ஷாலிமர்- திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் நாளையும்,திருவனந்தபுரம்-ஷாலிமர் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன. எர்ணாகுளம்-ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க