• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யாஸ் புயல் காரணமாக கோவை வழித்தடத்தில் இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து

May 25, 2021 தண்டோரா குழு

யாஸ் புயல் காரணமாக கோவை வழித்தடத்தில் இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

யாஸ் புயல் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு கோவை,ஈரோடு, சேலம் வழித்தடங்களில் இயக்கப்படும் ஷாலிமர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் 26-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் நாளை ,பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 28-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

திருவனந்தபுரம் -அசாம் மாநிலம் சில்சார் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நாளையும், சில்சார்- திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.இதுதவிர ஷாலிமர்- திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் நாளையும்,திருவனந்தபுரம்-ஷாலிமர் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 27-ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன. எர்ணாகுளம்-ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க