• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“மோடி அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி”-வைரமுத்து டிவீட்

February 17, 2018 தண்டோரா குழு

“மோடி அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறதுமகிழ்ச்சி என கவிஞர் வைரமுத்து டுவீட் செய்துள்ளார்.

டெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தேர்வுகள் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசிகையில் சமஸ்கிருதத்தை விட அழகான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என கூறியிருந்தார்.

இந்நிலையில், அதற்கு கவிஞர் வைரமுத்து மோடி பெயரை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளார். அதில், தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடிஅவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி.மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன் எனக் குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க