• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கையில் விளையாட கொடுத்த செல்போன் பட்டனை முழுங்கிய குழந்தை

May 26, 2018 தண்டோரா குழு

குழந்தை மொபைல் போன் பட்டனை விழுங்கியதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு 3 வயதில் உத்தேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக செல்போன் பட்டனை பிய்த்து விழுங்கியுள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.

தற்போது குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க