• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 6-ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

February 8, 2018 தண்டோரா குழு

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே.6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்-ல் சேரமுடியும்.கடந்த 2016 ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படியில் எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2016 ம் ஆண்டு தமிழகத்துக்கு மட்டும் நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

2017 முதல் தமிழகத்தில் நீட் தேர்வுப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே.6ஆம் தேதி நடைபெறும் என தற்போது அதிகார்பபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மே 6-ந்தேதி இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை ஆன்லைனில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இஅறிவித்துள்ளது. அதைபோல், பொதுபிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 1400 ரூபாயும், எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக பெறப்படவுள்ளது.

மேலும் படிக்க