• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது – தமிழக அரசு அறிவிப்பு

April 20, 2020 தண்டோரா குழு

மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு தளர்த்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஏப்ரல் 20- க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையினை செயல்படுத்துவது குறித்தும் இன்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற மே 3ம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும்
நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க