• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்கு மண்டல பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவு

October 14, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்குட்பட்ட பி.என்.புதூர், வீராசாமி காலனியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகள், பிறப்பு இறப்பு பதிவேடு, புகார் பதிவேடுகளை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும்,வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைபடுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, பி.என்.புதூர், வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலஅளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல தலைவர் தெய்வயானைதமிழ்மறை, கவுன்சிலர் சாந்தி, உதவி கமிஷனர் சேகர்,உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார அலுவலர் பரமசிவம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

மேலும் படிக்க