February 24, 2021
தண்டோரா குழு
மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜியாக தினகரன் இ.கா.ப பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றியுள்ளதால் இம்மாவட்டத்தைப் பற்றி ஓரளவு தெரியும் என தெரிவித்தார்.4 point அஜந்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் (1.பொதுமக்களின் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது காவல்துறையினரால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 2.சட்ட விரோத செயல்கள் எது நடந்தாலும் அவை தடுக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 3.சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 4. மேற்கு மண்டலங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்) என்று தெரிவித்த அவர் பிரதமரின் வருகைக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.