• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும். – முதல்வர்

October 5, 2018 தண்டோரா குழு

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அங்குள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்,

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அங்குள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான இடங்களில் வசிப்போரை மேடான இடங்களில் தங்க வைக்கவும், டெங்கு பரவாமல் தடுக்க, தேங்கும் மழை நீரை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎஸ் கொசு இல்லாத இடமாக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை பராமரிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுரங்க பாதைகளில் நீர் புகுந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். சாலையில் விழும் மரங்களை அகற்றும் வகையில், இரவு பணிக்கு ஒவ்வொரு குழுவும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநில மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த 662 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் 1,275 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வக்கப்படும் மக்களுக்கு போதிய தண்ணீர்,சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பால்பவுடர், மருந்துகள்,சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீனவர்கள் கரைக்கு திரும்பிவிட்டார்களா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க