• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – ரூ.1.55 லட்சம் பறிமுதல்

February 11, 2022 தண்டோரா குழு

கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

கோவைப்புதூர் பகுதியில் கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவு, லைசென்ஸ் கொடுப்பது உள்பட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து 16 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் குழு இன்று மாலை கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மேலும் படிக்க