November 20, 2019
மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
அமெரிக்க பயணம் முழு வெற்றி பயணமாக அமைந்தது, பல முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன்.
யார் இணைந்தாலும், யார் பிரிந்தாலும் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது
மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம்.அரசியலில் எதுவும் நடக்கலாம். 58 கால்வாய் குறித்து கருணாநிதி ஆட்சியில் தவறான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.